ரபிவுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் நமது ஆலிம்களுக்கு மிகவும் கொண்டாட்டம்,மவ்லிது அபிமானிகளுக்கோ திண்டாட்டம், பத்து பணி ரெண்டு ஆலிம்களை அழைத்து விருந்து அளித்து மவ்லிது ஒத சொல்லி கேட்டு ரசிப்பதற்கு செலவுக்கு பணம் வேண்டுமே அதனால்டான் அந்த அளவுக்கு மவ்லிதும் என்ன முக்கியம் ..
¶.மவ்லீதுகளில் சிறந்தது "கஸீதத்துல் புர்தா " எனும் கவிதை ஆகும் அது தமிழில் கூட மொழி பெயர்க்கப்பட்டு "புரவலர் போர்த்திய பொன்னாடை",என்ற பெயரில் வெளிவந்து உள்ளது அதனுடைய ஆசிரியர் இமாம் "பூஸிரி" அவர்கள் .இவர் அந்தநூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்..
நான் ஆரம்ப காலத்தில் கதைகளும்,செக்ஸ் நூல்களும் எழுதினேன் பிறகு நம் மனம் திருந்தி நம்முடைய புலமை வீணாக ஆகுதே நன்மையான காரியம் செய்வோம் என்று எண்ணி நபிகளார் பெயரில் புகழ்மாலை எழுதினேன் சில வரிகள் எழுதிய பிறகு எனக்கு எழுதுவதற்கு வரிகள் வரவில்லை யோசித்து யோசித்து களைப்பில் தூங்கிவிட்டேன் அப்போது எனது அறை எங்கும் நறுமணம், ஊது பத்தி,சந்தனம்,சாம்பிராணி மணம்,பளீரெண்டு வெளிச்சம் "அப்போது நபிகளார் தோன்றி தமது போர்வையை என்மீது போர்த்தி, கவிதை வரி எடுத்து தந்தார்கள். நான் திடுக்கிட்டு விழித்தேன் எனது தோளில் போர்வை இருக்கிறது எனது அறையில் நறுமணம் வீசுகிறது ஆனால் நபிகளாரை காணவில்லை நான் நபிகளார் எனக்கு எடுத்து கொடுத்த வரியை கொண்டு கவிதையை தொடர்ந்தேன் ,இது பூசிரி இமாம் முன்னுரையில் கூறுவது இந்த முன்னுரையில் மூலம் அவர் கூறுவது: தனது கவிதைக்கு வரி எடுத்து தந்தது நபிகள் நாயகம் என்றும்,தமது கவிதைக்கு நபிகளாரின் அங்கீகாரம் இருப்பதாகவும் கூறுகிறார். |