முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!
ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


உலக மகளிர் தினம், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும்.

இந்த முட்டாள்கள் தினம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. எனவே, இந்த தினம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வு செய்யாமல், இந்த தினம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.

இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். தாய்க்கு ஃபோன் செய்து அவர்களின் ஒரே மகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும்.

இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்; நபி ஜஸல்ஸ அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராக திகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை.

ஹெர்குலிஸ் மன்னனிடம் ஜஅப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராதஸ அபூஸ{பியான்ஜரலிஸ அவர்கள் நபிஜஸல்ஸ அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;
ஹெர்குலிஸ்; அவர் ஜநபிஸல்ஸ இவ்வாறுஜதூதரென்றுஸ வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?

'அபூ ஸ{ப்யான்; இல்லை.ஜஹதீஸ் சுருக்கம்ஸ (நூல்; புஹாரி, எண் 7) முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா? நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள். (நூல்;புஹாரி)

வியாபாரத்திலும் பொய் கூடாது: இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!" (நூல் : புஹாரி).

வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா? எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய ஸஹாபாக்கள்; தபுக் யுத்தத்தில் கலந்துக் கொள்ளாதவர்களில் மூவர் தவிர மற்றவர்கள் சாக்குப் போக்கு சொன்னவர்கள். மன்னிக்கப்பட, பொய் சொல்ல விரும்பாத கஅப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால்ஜரலிஸ, முராராஜரலிஸ ஆகியோர் பொய்யுரைக்க விரும்பாததால், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது; அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார் (என் தந்தை) கஅப் இப்னு மாலிக்(ரலி) 'தபூக்' போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை கேட்டேன்.

அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர் வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்து கொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன். 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுற வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள். (நூல் : புஹாரி, எண் 4673)

மற்றொரு ஹதீஸில்: அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்.

'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது.

இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான்.

”இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.' (திருக்குர்ஆன் 09:117-119) நூல்; புஹாரி, எண் 4678

கஅப் இப்னு மாலிக்ஜரலிஸ உள்ளிட்ட மூவர் பொய் சொல்லி அல்லாஹ்வின் தூதரிடம் தப்பித்திருக்க முடியும், ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக் கொண்டார்கள் என்றால், ஸஹாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?

பொய்யர்களுக்கு தண்டனை : ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி ஜஸல்ஸ அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.ஜஹதீஸ் சுருக்கம்ஸ (நூல் : புஹாரி)

என்ன சகோதரர்களே! இம்மைஃ மறுமையை பாழாக்கும் பெய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்!

-முகவை அப்பாஸ், குவைத்.

   
   
   
 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி