நபிகள் நாயகத்தை முஸ்லிம்களாகிய நாம் அதிகமதிகம் நேசிப்பதை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்த மீலாதும் மவ்லூதும் ஆகும்..
¶.மீலாது விழா ஆதரவாளர்கள் தங்களது செயலுக்கு வைக்கும் ஆதாரம்:
ஒரு சஹாபியின் கனவில் நபிகளாரின் பெரிய தந்தை அபுலஹப் வந்தார் அபுலஹபிடம் அந்த சஹாபி நீர் காஃபிராயிற்றே மண்ணறையில் (கஃப்ரில்) நீர் எந்த வேதனை அனுபவிக்கிறீர் என்று கேட்டார் அதற்கு அபுலஹப் " முஹம்மது(ஸல்) பிறந்த போது அந்த செய்தியை எனது அடிமைப் பெண் என்னிடம் சொன்னாள் அப்போது எனது சுட்டு விரலை நீட்டி சந்தோஷமாக உன்னை விடுதலை செய்கிறேன் என்றேன்,அதன் காரணத்தால் எனது சுட்டு விரலில் இருந்து பால் வருகிறது.அதை குடித்து எனது கப்ரு வேதனையை லேசாக்கி கொள்கிறேன் என்றார்.
¶.இந்த கதையை மீலாது விழா ஆதரவாளர்கள் கூறிவிட்டு நபிகளாரின் பெரியப்பா அபுலஹப் தான் முதன் முதலில் நபிகளாரின் பிறந்த தினத்தை சந்தோஷமாக கொண்டாடினார். அதன் காரணமாக அவர் காஃபிராக இருந்தும் கப்ரு வேதனை லேசாக்கப்படுகிறது என்றால் முஃமீன்களாகிய நாம் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடினால் கப்ரில் எவ்வளவு சிறப்பு கிடைக்கும் எனவே தான் நபிகளாருக்கு "மீலாது விழா ",கொண்டாடுகிறோம் என்கிறார்கள்..
¶.அபுலஹபின் விரலில் இருந்து பால் வடிவதாக கதைவிட்டு மீலாது விழாவுக்கு ஆதாரம் கூறும் இவர்களை பார்த்து அல்லாஹ் கூறுவதை பாருங்கள்
ஆகட்டும் அபுலஹபின் இரு கரங்களும் நாசமாகட்டும் அவனும் நாசமாகட்டும் அல் குர்ஆன்:111:1..
மேற்கண்ட இறை வசனம் அபுலஹப் உயிரோடு இருக்கும்போது, நபிகளாரை எதிர்த்ததால் அல்லாஹ்வால் இறக்கப்பட்டது அல்லாஹ்வால் கரங்கள் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவனின் விரலில் பால் வடிவதாக கூறும் இவர்கள் உண்மையான அறிஞர்களா? சிந்தியுங்கள்.
நபிகளாரை அதிகமதிகம் நேசித்த அபுபக்கர்,உமர்,உதுமான்,அலி(ரலி).ஆகியோர் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடவும் இல்லை.ஏனெனில் நபிகளார் பிறந்த் தேதி யாருக்கும் தெரியாது நபி(ஸல்)அவர்களும் கூறவில்லை,அன்றைய காலத்தில் பிறபு இறப்பு பதிவேடு இல்லை,வரலாற்று ஆய்வாளர்கள் கூட ரபியுல் அவ்வல் பிறை 12 நபிகளார் வபாத்தான தினம் என்றே கூறுவதை கவணிக்களாம்
|